Sunday, May 29, 2011

செல்லமா பாரதி

சின்ன பிள்ளையா இருக்கும் போதே பாரதியை படிக்கவும் ரசிக்கவும் ஆரம்பிச்சிட்டேன்..  ஆனால் பாரதி படம் பார்த்ததுக்கு அப்புறமோ என்னவோ செல்லமாவை அதிகம் ரசிக்க ஆரம்பிச்சிட்டேன்..
பாரதி மாதிரி ஒருத்தர் கூட இவ்ளோ நாள் வாழ முடிஞ்சி இருக்கே.. அதுவே பெரிய விஷயம்...
ஆச்சரியம் இல்லாமல் பாரதி ஒரு உயர்ந்த மனிதர்.. ஆனால் ஒரு வீம்புக்கார கவிஞருடன் வாழும் போதும் சரி, வீட்டில் பணம் இல்லாமல் போகும் போதும் சரி, பாரதி தவறான பாதையில் செல்லும் போதும் சரி, பாரதி மீது அவர் கொண்ட காதலும் சரி..
இப்போ ஏன் திடீர்னு செல்லமா பத்தி எழுதிரேனா, அதுக்கு காரணம் வாலிபக் கவிஞர் வாலியும் என்றும் இளமை அனந்த விகடனும்.. போன வாரம் வந்த விகடன்ல நினைவு நாடாக்கள்ல செல்லமா பத்தி அவர் எழுதினது...
பாரதியின் சீடன் என்பதால் பாரதிதாசன் செல்லமாவை புகழலாம்... ஆனால் மேத்தாவின் கருத்து தான் என்னுடையதும் ..
"ஒரு ஞானக் கிறுக்கனோடு குடித்தனம் நடத்திய குணவதி அல்லவா அந்த அம்மாள்.. அது அவ்வளவு இலேசுப்பட்ட காரியமா என்ன?"
உண்மையான வார்த்தைகள்...  :) 

இப்போலாம் சும்மாவே சமோசா வாங்குற மாதிரி இரண்டு மாசத்தில விவாகரத்து வாங்கும் மக்களுக்கு நடுவில் செல்லமா ஓர் நிறைவான உதாரணம்...
எந்த ஒரு சாதனை மனிதனுக்கு பின் இந்த மாதிரி ஒரு பெண் இருப்பதால் தான் குடும்பம் நடக்குது, சாதனையும் நடக்குது..