Sunday, November 28, 2010

A masterpiece

If someone asks me to tell my favorite song... i will not have one to mention.. Even my player has a mix of M.S  Carnatic, BSB, Akon, Bharathiyar, 40's classics, sizzling Raja, to very latest release. Everything from drums to veena i love all forms of music. But this one song gives me an inner peace whenever i hear it, at any time or at any place.
Having great admiration for lyrics, i love the excellent piece of work from Kannadhasan to latest Karki.

Be it music or lyrics, this song gives me a soul satisfaction. Am sure whoever heard it will vote my point, and cannot stop hearing it once.. Such an extra ordinary piece from Yuvan. Still i dont know who wrote those lines.. Even during my tough times, the song had put a smile in my face.

A masterpiece from Selvaragavan and Yuvan combo.. Jus close ur eyes and hear it.. You will feel the real soul in it.

Friday, September 17, 2010

சமீபத்தில் நான் ரசித்த பாடல்



இப்பொழுது எல்லாம் தமிழ் சினிமா பாடல்களை கேட்கையில் மெய் சிலிர்க்கிறது ...
தமிழ் தமிழாக இருக்கிறது. இயல்பான,அழகான, முழுமையான சொற்கள். கவித்துவமான வரிகள்...
நா.முத்துக்குமார்,தாமரை இவர்களின் எழுத்துகள் இதில் பெரிதும் பாராட்டுதற்கு உரியது. சில ஆண்டுகளாக நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல்கள் இவர்கள் எழுத்துகளாக இருக்கிறது. இன்னொருவர் இருகின்றார்...
அந்த கவிக்கு எவ்வளவு தான் வயது என்று தெரியவில்ல. இத்தனை வயதிலும் இளமையான எழுத்து. சொல்லிக்கொண்டு இருபது வாலி என்ற இளைஞனை பற்றி தான்...
கரிசல் காடுகளை பற்றி எழுதியவர் மட்டும் என்ன சும்மாவா, இன்றைய ந்திரன் வரை அவர் எழுத்துகளிலும் ஒரு நேர்த்தி இருக்கும்....

சினிமா பாடல்களுக்கு இணையாக இப்போதெல்லாம் நம் சின்னத்திரை தொடர்களுக்கு வரும் பாடல்களும் நம் கவனத்தை ஈர்கின்றன. தொடர்களை பார்க்கும் எண்ணம் இல்லைனாலும் இந்த பாடல்களே 30 நிமிடம் முழுதும் பார்க்க வைத்துவிடும் போல...
சமீபத்தில் நான் பார்த்து ரசித்த ஒரு தொலைகாட்சி தொடரின் முகப்பு பாடலே நான் இந்த பதிவை எழுதும் காரணம்....
அந்த பாடல் வரிகளும், அதற்கு சின்மயியின் குரலும், அதை படமாக்கிய விதமும் என்னை மிகவும் கவர்ந்து விட்டது....
ஒரு தாய் தன் மகளை எண்ணி பாடுவது போல வரிகள்...எழுதி இருபது யுகபாரதி....
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை.

"வேதங்கள் நான்கு இல்லை, ஐந்து என்று உன்னை கொண்டேன்"
"தேவைகள் ஏதும் இல்லை... நீயே என் தெய்வமாக "
கண் விழிக்க காலை எதற்கு ? கிடைத்தாய் நீயும் கிழக்காய்...."
நீல வானம் தேவை இல்லை உந்தன் கண்கள் போதுமே..." அதிலும் இந்த வரிகளை கேட்கும் போதும் நான் மிகவும் ரசித்த பாரதியின் பாடலையே நினைவு படுத்தி விட்டது..

சுட்டும்விழிச் சுடர்தான்,- கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி,- கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நக்ஷத்தி ரங்களடீ!

சோலைமல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக்கட லலையே - உனது
நெஞ்சி லலைகளடீ!
கோலக்குயி லோசை - உனது
குரலி னிமையடீ!
வாலைக் குமரியடீ,- கண்ணம்மா!
மருவக் காதல்கொண்டேன்.

சாத்திரம்பேசுகிறாய்,- கண்ணம்மா!
சாத்திர மேதுக்கடீ
ஆத்திரங் கொண்டவர்க்கே,- கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ?
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்புசெய்வோம்;
காத்திருப் பேனோடீ?- இது பார்,
கன்னத்து முத்தமொன்று!

எத்தனை கவிகள் வந்தாலும் பாரதிக்கு நிகர் பாரதியே.... கற்பனையிலும் சரி.... அழகு தமிழ் வார்த்தைகளை கையாள்வதிலும் சரி...


Monday, August 30, 2010

தமிழுக்கும் அமுது என்று பேர்



"யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்." 

இதை சொன்ன கவிக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்று எண்ணியது உண்டா?

மொழி மனிதனை பண்பட வைக்கும்..பண்பாட்டை செழிக்க வைக்கும்...(7ஆம் வகுப்பில் படித்த தமிழ் புத்தகத்தில் சொல்லி இருப்பது போல). புதிதாக ஒரு மொழியை கற்கும் போது அறிவு விரிவடையும் என்பது என் கருத்து... 

யாம் அறிந்த மொழி என்று பெருமையுடன் எழுதிய கவிஞனுக்கு ஷெல்லிதாசன் என்ற பெயரும் உண்டு !!!

ஒரு குடும்பத்திற்கு ஒருவர் என (army la செர்ந்தோமோ இல்லையோ ) படிப்பு,வேலை என்று பல காரணத்திற்காக மாநிலம் கடந்து,கண்டம் தாண்டி, உலக மயமாக்கல், தொழிற்கல்வி முன்னேற்றம் என்று நாளொரு வளர்ச்சி நோக்கி செல்லும் நேரத்தில் நம் தேசிய மொழியே நமக்கு தெரியாமல் இருப்பது ஆச்சர்யம் தான்.

தமிழ் செம்மொழி தான் ஆனால் ஹிந்தி நம் தேசிய மொழி என்றாகி விட்டது. இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் தமிழ் மொழி தவிர மற்ற இந்திய மொழிகளை நம் பாடத் திட்டத்தில் சேர்க்காமல் இருப்பது? மன்னிக்கவும் சேர்க்க மாட்டேன் என்று அடம் பிடிப்பது.

சரி இவர்கள் வழிக்கே வருவோம். செம்மொழியை தவிர வேறு மொழிக்கு பாட திட்டத்தில் இடம் இல்லை என்று மொழி வளர்க்கும் அரசு, தமிழ் ஆசிரியரின் சம்பளத்தை உயர்த்துவதாகவும் தெரியவில்லை... தமிழ் அறிஞர்களை ஊக்குவிப்பதாகவும் தெரியவில்லை. 

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் பாடம் எடுத்து படிப்பவர்கள் விட கணினி படிப்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள் என்று பலர் சொல்லி கேட்டு இருக்கிறேன்... இதற்கு காரணம் தமிழ் மேல் பற்று இல்லை என்றோ கணினி மேல் புது மோகம் என்றோ சொல்லிவிட முடியாது.. 

ஒரு s/w பொறியாளனின் சம்பளம் மட்டுமே காரணம்.... 

குடும்பத்தில் முதல் பட்டதாரி ஒருவனை நம்பி அவன் குடும்பம் இருக்கும் நிலையில் அவன் தமிழில் பட்ட படிப்பு முடித்து மொழி வளர்க்க எண்ணுவானா அல்லது 2 வருடத்தில் தன் குடும்பத்தை வறுமை கோட்டில் இருந்து மீட்பானா??

இன்றைய நிலைமையில் தமிழ் படிக்கும் ஆர்வம் இருந்தால் மனதில் உறுதியுடன் செயல்பட வேண்டும். மொழிக்காக வாழ்ந்தவர்களை உயிர் உள்ளவரை அரசும் கண்டு கொள்ளாது. விவேக் ஒரு படத்தில் சொல்வது போல். தமிழ் ஆசிரியராகவே 3 காலத்தையும் கழிக்க வேண்டி இருக்கும்..அன்றைய பாரதி முதல் இன்றைய தமிழ் எழுத்தாளன் வரை(திரை துறையை சேர்ந்தவர்கள் மட்டும் விதிவிலக்கு)ஓவிய கலைஞனையும் இந்த list la சேர்த்து கொள்ளலாம்.

தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து படிப்பதோடு தேசிய மொழியையும் கற்போம் ஆங்கிலம் கற்பது போலவே..... 
செம்மொழியோ தாய்மொழியோ தமிழ் படித்தவனுக்கு லட்சங்களில் சம்பளம் வேண்டாம்.. தான் எழுதியதை ஏலம் போட்டு விற்காமல் தவிப்பவனை வறுமையில் இருந்து மீட்டால் நல்லது.. 

நான் அடிக்கடி பெருமிதம் கொள்ளும் தமிழ் மொழியை பற்றியும் என் தமிழ் ஆசிரியை பற்றியும் எழுத நினைத்தேன்.
கடைசியில் இந்த இரண்டு வருடத்தில் பெங்களுருவில் தமிழச்சி என்று அறிமுகம் ஆகும் போது பலர் என்னிடம் கேட்கும் கேள்வி நினைவுக்கு வந்துவிட்டது..

Saturday, August 14, 2010

my first scribble

Again a new beginning. At last, my scribbles..... :-)

Scribbling is the child’s way of writing her thoughts. Such scribbles cant be ignored bcoz the child writes it with some meaning. But neither of us understand each other's language.

Without a necessity to explain more, am reflecting my mind and thoughts in words.(readable and understandable scribbles) ;-)
(Phil Alden Robinson சொன்ன அளவுக்கு இல்லனாலும்) let me try to scribble quite often...

ohh...ok..ur asking me who Robinson is?

Let me scribble about him also once ....